கடலூர் மாவட்டத்தில் நகர்புற காடு அமைக்கும் திட்டம் சிற்றம்பலத்தில் தொடங்கப்பட்டது.
குறைந்த பரப்பில் அதிக எண்ணிக்கையில் மரக்கன்றுகளை நட்டுவைத்து அடர்ந்த குறுங்காடு உருவாக்கும் முறையை செயல்படுத்த தன்னார்வ தொண்டு நிறுவனமான Environmentalist Foundation India (E.F.I) திட்டமிட்டது.

கடலூர் கடற்கரையில் இருந்து சுமார் 22 கி. மீ. தொலைவில் சிற்றம்பலம் பகுதியில் தண்டேஸ்வர நல்லூர் நகராட்சியின்கீழ் ‘ஓமக்குளம்’ அமைந்துள்ளது. இதற்கு அருகில் பல வருடங்களாக குப்பைமேடாக காட்சியலிந்த இடத்தை, சுமார் 14 ஆண்டுகளாக தமிழ்நாடு உள்பட 16 மாநிலங்களில் வெற்றிகரமாக செயல்பட்டு வரும் சென்னையை சேர்ந்த அரசு சாரா அலல்து தன்னார்வ தொண்டு நிறுவனமான Environmentalist Foundation India (E.F.I) எனும் அமைப்பு அடர்வனமாக மாற்றியமைக்க திட்டமிட்டது. பின், சுமார் 1.4 ஏக்கர் பரப்பளவில் இருந்த குப்பைகளை நீக்கி, மரக்கன்றுகள் நடுவதற்கான வரைபடம் தீட்டப்பட்டது.

முதற்கட்டமாக, 18/08/2021 அன்று 12 வகையான 600 பூர்வீக மரக்கன்றுகள் நடும் பணியை, மாவட்டஆட்சியர்திரு. K. பாலசுப்பிரமணியம் தொடங்கிவைத்தார்.

இதில் பூக்கும் மரவகைகள், பசுமை மரவகைகள், பழ மரவகைகள் முதலியன இடம்பெற்றது.
வ. எண் | மரங்கள் | ஆங்கில பெயர் | அறிவியல் பெயர் | மர வகை | இடைவெளி (அடி) |
1. | இயல்வாகை | Yellow Flame Tree | Peltophorum pterocarpum | பூ | 3 * 3 |
2. | மகிழம் | Bullet wood | Mimusops elengi | பூ | 3 * 3 |
3. | சென்பகம் | Champak | Magnolia champaca | பூ | 3 * 3 |
4. | சொர்க்கம் | Paradise Tree | Simarouba glauca | பசுமை | 3 * 3 |
5. | அரை நெல்லி | Amla | Phyllanthus emblica | பழம் | 3 * 3 |
6. | அரசமரம் | Peepal Tree | Ficus religiosa | பசுமை | 3 * 3 |
7. | வேப்பம் | Neem Tree | Azadiracta indica | பசுமை | 3 * 3 |
8. | புங்கம் | Pungam | Pungamia pinnata | பூ | 3 * 3 |
9. | பூவரசம் | Portia Tree | Thespesia populnea | பசுமை | 3 * 3 |
10. | மந்தாரை | Bauhinia Tree | Bauhinia variegata | பூ | 3 * 3 |
11. | விளாம்பழம் | Wood Apple | Limonia acidissima | பழம் | 3 * 3 |
12. | நாவல் | Jamun | Syzygium cumini | பழம் | 3 * 3 |
சிற்றம்பலம் நகராட்சி திரு. L. மதுபாலன் சார் ஆட்சியர், திருமதி. M. அஜிதா பர்வின் ஆணையர், நகராட்சி அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மியாவாக்கி பயண்கள்:
- அடர்வனம் பகுதியில் காற்று மாசு கட்டுப்படுத்தப்படுதுடன்,
- பறவைகள், பூச்சிகள், தேனீக்கள் வனத்தில் அதிக அளவு வரும்.
- அவற்றின் மூலம் உயிர்ச்சூழல் மேம்படும்.
- மரக்கன்றுகள் நன்கு வளர்ந்தவுடன் வனத்தில் செல்லும் உணர்வு மக்களுக்குக் கிடைக்கும்.